அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் விசேட வழிபாடு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி, இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் மன்னார், திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம் பெற்றன. மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய குடும்ப உறவுகள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவுகள் இணைந்து விசேட வழிபாடுகளை மேற்கொண்டனர். சிறைச்சாலைகளில் தற்போது கொரோனா தொற்று பரவுவதன் காரணமாக தமிழ் அரசியல் கைதிகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து அவர்களின் குடும்பத்தினர் பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். தற்போது வரை … Continue reading அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் விசேட வழிபாடு